கொரோனாவை அழிக்க தன் உடலை பூமிக்குள் புதைத்து பூஜை செய்த சித்தர்!

 

கொரோனாவை அழிக்க தன் உடலை பூமிக்குள் புதைத்து பூஜை செய்த சித்தர்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கம் குறைய வேண்டி தூத்துக்குடியை சேர்ந்த சித்தர் ஒருவர் தன் உடலை பூமிக்குள் புதைத்தும், நெருப்பு வளையம் வைத்தும் பூஜை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 52லட்சத்து 26ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 35ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்திலும் சுமார் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை அழிக்க தன் உடலை பூமிக்குள் புதைத்து பூஜை செய்த சித்தர்!

இந்நிலையில் கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள ஸ்ரீப்ரத்தியங்கராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் நிர்வாகியாக இருக்கும் சீனிவாச சித்தர். கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி தவ பூஜை ஒன்றை செய்தார். அதற்காக அஷ்ட காளிகளை வேண்டிக்கொண்டு தன்னுடைய உடல் பகுதியை பூமிக்குள் முழுவதுமாக புதைத்து தன்னை சுற்றி நெருப்பு வளையம் வைத்து பூஜை செய்தார். பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருந்தால் கொரோனா தொற்று பரவாது எனக்கூறி இந்த பூஜை நடத்தியதாக சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.