கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி.. குஜராத்தில் 85 வயது மூதாட்டி உயிரிழப்பு!

 

கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி.. குஜராத்தில் 85 வயது மூதாட்டி உயிரிழப்பு!

கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600ஐ கடந்த நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா  காற்றின் மூலம் எளிதில் பரவும் தன்மை கொண்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களின் மூலமாகவே கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

ttn

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த மூதாட்டி கடந்த 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் இருந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.