கொரோனாவிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 581 புள்ளிகள் இறங்கியது….

 

கொரோனாவிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 581 புள்ளிகள் இறங்கியது….

தொடர்ந்து 4 நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தது.

உலகமெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்தனர் இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

ரூபாய் வெளிமதிப்பு சரிவு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐ.டி.சி., பார்தி ஏர்டெல், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டெக்மகிந்திரா உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று  574 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,828 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.  159 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.109.71 லட்சம் கோடியாக சரிந்தது. 

மாருதி சுசுகி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 581.28 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 28,288.23 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 205.35 புள்ளிகள் சரிந்து  8,263.45 புள்ளிகளில் முடிவுற்றது.