கொரோனாவின் தீவிரம்: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

 

கொரோனாவின் தீவிரம்: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

நேற்று 3 மாவட்டத்தில் மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2000ஐ எட்டியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளதால் நேற்று 3 மாவட்டத்தில் மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் ஆலோசனை தொடங்கியுள்ளது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.