கொரோனாவால் மதுப்பழக்கத்தை விட்ட நபர்.. திடீர் திருப்பத்தால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர்!

 

கொரோனாவால் மதுப்பழக்கத்தை விட்ட நபர்.. திடீர் திருப்பத்தால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர்!

யாராலும் செய்ய முடியாத ஒன்றை கொரோனா வைரஸ் செய்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காட்டை பகுதியை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சக்திவேல். இவர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பத்திரங்கள் எழுதி கொடுக்கும் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அவர் வேலை செய்து, சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் மது வாங்கிக் குடித்து விடுவாராம். இப்படியே இருந்து வந்த இவரின் வாழ்க்கையில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. யாராலும் செய்ய முடியாத ஒன்றை கொரோனா வைரஸ் செய்துள்ளது. 

ttn

ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், சக்திவேல் மது இல்லாமல் அலைந்து அலைந்து ஒரு கட்டத்தில் மது பழக்கத்தையே விட்டுள்ளார். பின்னர், அவரது தந்தையுடன் சேர்ந்து முகக்கவசம் விற்று வருகிறாராம். இதனை பற்றி பேசிய அவர், ஒரு நாளைக்கு 20 மாஸ்க் விற்று வருவதாகவும் , இனிமேல் மதுக்கடை திறந்தாலும் அதனை பற்றி எனக்கு தோன்றாது என்றும் கூறியிருக்கிறார். சக்திவேல் மது பழக்கத்தை விட்டதால், நிம்மதி ஆக இருப்பதாக சக்திவேலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.