கொரோனாவால் பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை பலி!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 32ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 32ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை பொறுத்தவரையில் 2 லட்சத்து16 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
5,115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது குறித்து கூறியுள்ள ஆளுநர் லாமொண்ட், ‘கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது. இந்த சம்பவம் மனதை உருக்குகிறது. கொரோனாவால் பலியானவர்களில் இது மிகவும் இளம் வயது உயிரிழப்பு’ என்று கூறியுள்ளார்.