கொரோனாவால் நாளுக்கு நாள் அதிகமாகும் பலி எண்ணிக்கை…இதுவரை 3,012 பேர் உயிரிழப்பு!
Mar 5, 2020, 09:09 IST1583379593000
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் பலி எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.
தென் கொரியாவில் இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். அதே சமயம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும் பலி எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
இந்நிலையில், கொரோனா வைரஸால் சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,981லிருந்து 3,012 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,409 ஆக உயர்ந்துள்ளது.