கொரோனாவால் தனிமை படுத்தப்பட்ட இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்!

 

கொரோனாவால் தனிமை படுத்தப்பட்ட இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவும் நிலையில், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ttn

அதே போல கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் இருந்து திரும்பிய, புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞரும் தனிமைப்படுத்த பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இவர் தனிமையில் இருந்த நிலையில், மன உளைச்சலால் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார், அவர் மன உளைச்சலால் உயிரிழந்தாரா.. அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.