கொத்து கொத்தாக மடியும் மக்கள்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலி!

 

கொத்து கொத்தாக மடியும் மக்கள்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலி!

அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

tt

இருப்பினும் மற்ற நாடுகளை விட  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு  அதிகமாகவே  உள்ளது. இதுவரை அந்த நாட்டில்  8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 44,845 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

t

கடந்த திங்கள் இரவு 8:30 மணி முதல் நேற்று இரவு  8:30 மணி வரை அதாவது ஒரே நாளில் இரவு கிட்டத்தட்ட 40,000 பேருக்கு பதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.