கொதிக்கும் எண்ணெய்யை கணவரின் முகத்தில் ஊற்றிய மனைவி! 

 

கொதிக்கும் எண்ணெய்யை கணவரின் முகத்தில் ஊற்றிய மனைவி! 

குடும்பத் தகராறு காரணமாக கொதிக்கும் எண்ணெயை மனைவி கணவன் மீது ஊற்றியதில், அவர் உயிரிழந்தார்.

சென்னை திருவிக நகரின் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா- நஸ்ரின். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டத்தில் அடுப்பிலிருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கணவரின் மீது ஊற்றியுள்ளார்.

Murder

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உபயதுல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருவிக நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.