கொட்டும் மழையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி
Dec 5, 2018, 19:59 IST1544020149000
ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.