கொடுத்த வாக்குகளையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் – ஜோதிமணி உருக்கம்

 

கொடுத்த வாக்குகளையும், நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் – ஜோதிமணி உருக்கம்

கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

கரூர் மக்களவை தொகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “நான் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன். என் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளனர். தேர்தலில் பணம் இருந்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என நினைத்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். வாக்குகளை கேட்க எப்படி தெரு தெருவாக சென்றோமோ அதேப்போன்று வாக்குறுதிகளையும் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலின்போது ஆளும் அரசுகளின் நெருக்கடி இருந்தது.” எனக்கூறினார்.