கொடநாடு சதித்திட்டம் நிறைவேறாது: தம்பிதுரை அதிரடி

 

கொடநாடு சதித்திட்டம் நிறைவேறாது: தம்பிதுரை அதிரடி

முதல்வர் பழனிசாமி மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கோவை: முதல்வர் பழனிசாமி மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயன், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸிடம் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தார். 

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முதல்வர் உட்பட அதிமுகவினர் மறுத்து வருகின்றனர். இதற்கிடையே, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை டெல்லி சென்ற தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், தமிழக முதல்வர் மீது அவதூறு கிளப்பும் கொடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. அதிமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர்காய்வதே திமுகவின் கொள்கை என்றார்.