கொசு மருந்து வண்டியே பரவாயில்ல போல… அரசு பேருந்தின் பரிதாபங்கள்!
Nov 11, 2019, 07:51 IST1573438918000
பெரும்பாலான அரசு பேருந்துகள் பழுதாகி வழியிலேயே நின்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
அரசு பேருந்து அல்லது கொசு மருந்து அடிக்கும் வண்டி வருகிறதா? என்ற அளவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தற்போதுள்ள அரசு பேருந்துகளின் நிலை. பெரும்பாலான அரசு பேருந்துகள் பழுதாகி வழியிலேயே நின்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து கக்கிய புகை, ஒரு நிமிடம் மக்களை திணறவைத்துள்ளது.
அடிக்கடி அரசு பேருந்துகளின் இதுபோன்ற பழுதால் வாகன ஓட்டிகளும் திக்குமுக்காடிப் போய் விடுகின்றனர்.
பழைய பேருந்துகளால் இப்படி பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் அரசு புதிய பேருந்துகளை வழங்க வேண்டும் என்று பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.