கையில போன் ,வாயில சண்டை ,பையில குழந்தை -குடித்த நபரால் துடித்த குழந்தை-குடும்ப சண்டையின் கொடூரம்..
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் குடித்துவிட்டு, மனைவியுடன் சண்டைபோட்ட பின், மனைவியைப் பயமுறுத்துவதற்காக குழந்தையை ஒரு பையில் எடுத்துச் சென்றார். கோரமங்கலாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறையினரிடம் இது பற்றி புகார் கூறியதை தொடர்ந்து அவர் ஃபோரம் மால் அருகே பிடிபட்டார், மேலும் போலீசாரின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் குடித்துவிட்டு, மனைவியுடன் சண்டைபோட்ட பின், மனைவியைப் பயமுறுத்துவதற்காக குழந்தையை ஒரு பையில் எடுத்துச் சென்றார். கோரமங்கலாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறையினரிடம் இது பற்றி புகார் கூறியதை தொடர்ந்து அவர் ஃபோரம் மால் அருகே பிடிபட்டார், மேலும் போலீசாரின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
பெங்களூரு (கர்நாடகா): பெல்லந்தூரில் வசிக்கும் சுஷில் குமார் பெரிய குடிகாரன் எனக் கூறப்படுகிறது . அவர் மனைவியுடன் சண்டைபோட்ட பின்னர் தெளிவான மனநிலையை இழந்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது குழந்தையை ஒரு பையில் வைத்துக் கொண்டு, அந்த பையை பிறகு அவர் தனது ஸ்கூட்டரின் காலடியில் வைத்தார்.
அவர் இப்படி வண்டியில் போவதை கோரமங்கலாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனித்து,அந்த நபர் குழந்தையை கடத்துவதாக எண்ணி உடனடியாக போலிஸை அழைத்தார், .மேலும் அதை போட்டோ எடுத்து அவர் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தகவலறிந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று அவர் ஃபோரம் மால் அருகே தென்கிழக்கு பிரிவு போலீசாரால் பிடிக்கப்பட்டார்
.அவரை இதுபற்றி போலீசார் விசாரித்தபோது , அவர் தனது மனைவியிடம் சண்டைபோட்டு கோபமாக இருப்பதாகவும் ,அவரை பயமுறுத்துவதற்காக ஒரு பையில்குழந்தையை சுமந்து சென்றதாக கூறினார் . இதனால் போலிஸ் சுஷிலுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்து, இதுபோன்ற ஒரு செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர் ..