கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட முக ஸ்டாலின் , டிடிவி தினகரன்

 

கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட முக ஸ்டாலின் , டிடிவி தினகரன்

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரத்திலேயே திமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரின் உரையை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அமமுக கட்சியினரும். மனித நேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரியும் வெளிநடப்பு செய்தனர். இந்த அனைத்து கட்சியினரும் வெளியேறியதன் காரணம் குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றி கூட்டத் தொடரில் விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது தான். 

ttn

கூட்டத் தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார். இதனிடையே திமுக தலைவர் முக ஸ்டாலினும், அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கைக்குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.