கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.. மனிதர்களுக்கு பாடம் புகட்டும் குரங்கின் வைரல் வீடியோ!

 

கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.. மனிதர்களுக்கு பாடம் புகட்டும் குரங்கின் வைரல் வீடியோ!

அவை செய்யும்  அறிவுப்பூர்வமான செயல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விலங்குகள் 5 அறிவு கொண்டிருந்தாலும், 6 அறிவு கொண்ட மனிதனை விட ஒரு படி மேலாக இருக்கும் அவற்றின் செயல் நம்மை பிரமிக்க வைக்கிறது. அடிக்கடி விலங்குகளின் சேட்டைகள் செய்யும் வீடியோ  வைரல் ஆகி வருவதை போல, அவை செய்யும்  அறிவுப்பூர்வமான செயல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 20 நிமிடம் நன்றாக கை கழுவ வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் ஓராங்குட்டான் குரங்கின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 

ttn

ஜெர்மனி நாட்டில் இருந்த வந்த இந்த ஓராங்குட்டான் குரங்கு, ஃபார் கிரேட் ஆப்ஸ் (Center for great apes) என்னும் ஓராங்குட்டான் குரங்கு சரணாலயத்தில் இருந்து வருகிறது. 34 வயதான அந்த குரங்கின் பெயர் சாண்ட்ரா. கொரோனா வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள 20 நிமிடம் கைகளை முறையாக கழுவ வேண்டும் என்றும் எல்லா இடங்களிலும் மக்களுக்கு அறிவுறுத்த பட்டு வருகிறது. அப்படி சோப்பு போட்டு கழுவ முடியவில்லை என்றால் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மனிதர்களே அடிக்கடி கைகளை கழுவ யோசிக்கும் இந்த சூழலில், இந்த ஓராங்குட்டான் குரங்கு கைகளை நன்றாக தேய்த்துக் கழுவுகிறது. அதுவும் கையில் பிரஷ் வைத்துக் கொண்டு கழுவுகிறது.