கேரள வெள்ளத்திற்கு 91 பேர் பலி!

 

கேரள வெள்ளத்திற்கு 91 பேர் பலி!

கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள வெள்ளத்திற்கு 91 பேர் பலி!

கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கன மழை படிப்படியாக குறைந்து வருகிறது. கன மழைக்கு இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அதிகப்பட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 51 பேர் மாயமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கோழிக்கோடுவில் 17 பேரும், வயநாட்டில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் வீடுகளை இழந்த 46,400 குடும்பங்களை சேர்ந்த 1,65,519 பேர் 1,318. வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயனாடு மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 74,990 பேர், 183 வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் மார்க்கமாக செல்லும் 15 ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சில விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன