கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் – மர்ம கடிதத்தில் எச்சரிக்கை

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் – மர்ம கடிதத்தில் எச்சரிக்கை

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ரகீம் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ரகீம் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்ததை தொடர்ந்து, இந்த சட்டத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ரகீமுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.

ttn

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ரகீம் ஆகிய இருவரையும் வீடு புகுந்து வெட்டி கொல்வோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மர்ம கடிதம் தொடர்பாக திருவனந்தபுரம் போலீஸ் கமி‌ஷனர் பல்ராம் குமார் உபாத்யாயிடம் ரகீம் புகார் கொடுத்தார். இதையடுத்து மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.