கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் கொலைகள் படமாகிறது!

 

கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் கொலைகள் படமாகிறது!

ஜோலி  தாமஸ் என்பவர் மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளது. 

கேரளா:  ஜோலி  தாமஸ் என்பவர் மட்டன் சூப்பில் சயனைடு கொடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளது. 

jolly

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோலி  தாமஸ் என்பவர் கணவரின் சகோதரன் மீது இருந்த காதல் மோகத்தால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்து அதிர்ச்சியைக் கிளம்பியுள்ளார். அதன்படி  நகைப்பட்டறையில் பணிபுரியும் தனது நண்பரிடமிருந்து  சயனைடு வாங்கியுள்ளார். ஜோலி  குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு 2002ஆம் ஆண்டு மட்டன் சூப்பில் சயனைடை கலந்து கொடுத்துள்ளார்.  இதன் முறையே  2008ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸையும் 2011ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் கொலை செய்துள்ளார். ஜோலியின் நடவடிக்கையில் சந்தேகம் பட்ட அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவையும் இதே பாணியில் தீர்த்து கட்டியுள்ளார் . இதன்பின்னர் இறுதியாக 2016ஆம் ஆண்டு காதலன் சாஜுவின் மனைவி மற்றும் 10 மாத பெண் குழந்தைக்கும் மட்டன் சூப் கொடுத்து கொலை செய்துள்ளார்.

jolly

திருமணத்திற்குத் தடையாக இருந்த மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டிவிட்ட நிம்மதியில் ஜோலி   மற்றும் சாஜூ 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  குடும்பத்தில் தொடர் மரணங்கள், மனைவி இறந்து ஒரு வருடத்தில் சாஜு -ஜோலி  திருமணம் செய்து கொண்டது என பல்வேறு சந்தேகங்கள் உறவினர்கள் மத்தியில் எழுந்தது. 

jolly

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த ஜோலியின் முதல் கணவரின் சகோதரர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்கள்  மீது சந்தேகம் இருப்பதாகப் போலீசில் புகார் கொடுக்க, ஜோலியின் உறவினர்களும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் கல்லறைகளைத் தோண்டி எடுத்த போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து ஜோலி, அவரது 2வது கணவர் சாஜு, நகைப்பட்டறை ஊழியரை பிடித்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.  அதில் 6 பேரையும் கொன்றதை ஜோலி  ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.  ஜோலி  வெவ்வேறு இடங்களில் இருந்து சயனைடுகளை வாங்கியதாகவும் தெரிகிறது.  மேலும்  பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பில்  இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

mohanlal

இந்நிலையில் இந்த பயங்கரமான கொலைகளை மையமாக கொண்டு மலையாளத்தில் இரண்டு திரைப்படங்கள் உருவாகவுள்ளன. அவற்றில் இயக்குநர்   ஜீது ஜோசப் இப்படத்தை இயக்க முடிவுசெய்துள்ளார். இவர் மலையத்தில் த்ரிஷயம் படத்தை இயக்கிவர் ஆவார். இப்படம் தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கானது.  இப்படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இதில்  விசாரணை அதிகாரியாக மோகன்லால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் கொலபாத கண்களூ டே ஒன்னர பத்திதண்டு என்ற பெயரில் இதே சம்பவத்தை அடிப்படையாக மேலும் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ரோனெக்ஸ் பிலிப் இயக்கும் இப்படத்தை அலெக்ஸ் ஜோசப் தயாரிக்கிறார். குற்றவாளி ஜோலி கதாபாத்திரத்தில் டினி டேனியல் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.