கேரளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை- பினராயி விஜயன்

 

கேரளாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை- பினராயி விஜயன்

கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ கேரளாவில் திங்கட்கிழமையான இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மாறாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61 குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 499பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 462பேர். இதுவரை மாநிலம் முழுக்க இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய் தொற்று அறிகுறியுள்ள 33,010 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 32315 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.