கேமராவிற்கு ஸ்பிரே அடித்த திருடர்கள்!! இவ்வளவு பிளான் போட்டும் சொதப்பல்…

 

கேமராவிற்கு ஸ்பிரே அடித்த திருடர்கள்!! இவ்வளவு பிளான் போட்டும் சொதப்பல்…

கவரைப்பேட்டை அருகே  சூரவாரிகண்டிகை பகுதியில் உள்ள  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இந்திரத்தை உடைத்து திருட  முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கவரைப்பேட்டை அருகே  சூரவாரிகண்டிகை பகுதியில் உள்ள  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இந்திரத்தை உடைத்து திருட  முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூரவாரிக்கண்டிகை கிராமத்திலுள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி. எம் மையத்தில் ஒருவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே காவல்துறையினருக்கும், வங்கிக்கும் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினார். அப்போதுதான் இந்த உண்மை தெரியவந்தது. கொள்ளையர்கள் திருடுவதற்கு முன்பு ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்து நூதனமாக திருடியது தெரியவந்தது.  இவ்வளவு ரிஸ்க் எடுத்த திருடர்களுக்கு கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே… ஏடிஎம் இயந்திரத்தை முழுவதுமாக உடைக்க முடியாததால் அதிலிருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது மட்டுமின்றி, கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.