கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்த தாய்…8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை! …8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!

 

கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்த தாய்…8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை! …8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!

இதனால் கோபமான  தாய் சங்கீதா,   வியாழனன்று  கேபிள் இணைப்பைத் துண்டித்துள்ளார். 

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணையில் உள்ள சீனிவாச நகரைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவருக்கு அரவிந்த் கிருஷ்ணன், அமுதீஸ்வரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கொளஞ்சி நாதன் வீட்டில் கடந்த ஓராண்டாக கேபிள் டிவி கனெக்ஷன் இல்லாமல் இருந்துள்ளது. 

ttn

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தான் கேபிள் டிவி கனெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரவிந்த் கிருஷ்ணன், அமுதீஸ்வரன் இருவரும் படிக்காமலிருந்துள்ளனர். இதனால் கோபமான  தாய் சங்கீதா,   வியாழனன்று  கேபிள் இணைப்பைத் துண்டித்துள்ளார். 

ttn

இதனால் வேதனையடைந்த இரு மகன்களில் ஒருவரான 8ஆம் வகுப்பு படிக்கும் அமுதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோர் மகன் சடலமாகக் கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.