கூரையை பிய்த்து கொடுத்த தெய்வம் ! 60 ரூபாயில் கோடீஸ்வரன் ஆன கூலித் தொழிலாளி !

 

கூரையை பிய்த்து கொடுத்த தெய்வம் ! 60 ரூபாயில் கோடீஸ்வரன் ஆன கூலித் தொழிலாளி !

மேற்கு வங்க மாநிலத்தில் 60 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்கியவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து அவர் பாதுகாப்பு கேட்டு போலீசை நாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 60 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்கியவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து அவர் பாதுகாப்பு கேட்டு போலீசை நாடியுள்ளார்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். தெய்வம் கொடுக்கிறதோ இல்லையோ சில சமயங்களில் லாட்டரி நிறுவனங்கள் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன.

மேற்குவங்க மாநிலம் கல்னா பகுதியை சேர்ந்த இந்திர நாராயண் என்பவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இவர் சமீபத்தில் நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை 60 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். அந்த லாட்டரி சீட்டுக்கு தற்போது ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இந்த தகவலை கேட்ட நாராயணன் முதலில் நம்பவில்லை பின்னர் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அன்றாடம் கூலித் தொழில் செய்து 5 ரூபாய் பத்து ரூபாய் கிடைக்குமா என்று பார்ப்பவர்களுக்கு திடீரென ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் இன்பத்துடன் பயமும் வரும். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயப்படுகிறார். யாராவது நம்மை தாக்கி லாட்டரி சீட்டை பிடுங்கி கொள்வார்களோ என்ற பயம்தான். இந்நிலையில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த தனக்கு பணம் வங்கியில் சேர்க்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையிடம் மனு அளித்துள்ளார் நாராயணன்.  இதுகுறித்து நாராயணன் கூறுகையில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை துர்கா கோயில் கட்டுவதற்கும், பூஜைக்கும் செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யாரோ ஒருவருக்கு பரிசு கிடைக்கிறது என்பதற்காக பல குடும்பங்கள் சீரழிகிறது என்பதற்காகத்தான் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் திருட்டுத்தனமாக விற்கும் லாட்டரி சீட்டுகளை நம்பி வாங்கியவர்கள் பலர் பணம், சொத்தை இழந்து தற்கொலைசெய்து கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.