கூத்துப்பட்டறை நா.முத்துசாமி மறைவு: கமல்ஹாசன் கண்ணீர் இரங்கல்

 

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி மறைவு: கமல்ஹாசன் கண்ணீர் இரங்கல்

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: கூத்துப்பட்டறை நா.முத்துசாமி மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி போன்ற நடிகர்களை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நாடக அமைப்பின் நிறுவனர் நா.முத்துசாமி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

அவரின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சில தனி மனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறை தான் ஈடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட முக்கியமான, இணையற்ற ஒரு சாதனையாளர் நா.முத்துசாமி அவர்கள். கூத்து, நாடகம், கலை துறைகளுக்கு அவர் நன்கு பயன்பட்டுள்ளார். பல நடிகர்களுக்கு நடிப்பை கற்றுத் தந்துள்ளார். அவர் இருந்த போது செய்தமைக்கு கலைஞனாக நன்றி” என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.