கூடா நட்போடு சேர்ந்திருக்கிறார் ஸ்டாலின்: சுட்டிக்காட்டும் பொன்னார்

 

கூடா நட்போடு சேர்ந்திருக்கிறார் ஸ்டாலின்: சுட்டிக்காட்டும் பொன்னார்

திமுக – காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை: திமுக – காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என தேசிய எதிர்க்கட்சிகள், மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு புறம் தேர்தலுக்கு முன்பாகவே ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் ஸ்டாலின் உள்ளிட்டோரும், தேர்தலுக்குப் பின்னர் பிரதமரை தேர்வு செய்யலாம் என மம்தா உள்ளிட்ட தலைவர்களும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பிரதமர் மோடியை சேடிஸ்ட் என ஸ்டாலின் கூறுகிறார். அதோடு மட்டுமின்றி, எங்கள் கூட்டணியை கொள்ளைக் கூட்டணி என்றும் விமர்சிக்கிறார். எது கொள்ளை ஆட்சி என்பது அவர்களுக்கே தெரியும். கருணாநிதி கூறியதைப் போல் கூடா நட்போடு, ஸ்டாலின் தற்போது இணைந்திருக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

மேலும், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் பேசப்பட உள்ளதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.