குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொய்வு: இதுவரை தோண்டப்பட்டுள்ள குழியின் அடி இது தானாம்!?

 

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொய்வு: இதுவரை தோண்டப்பட்டுள்ள குழியின் அடி இது தானாம்!?

இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

திருச்சி : குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரிக் இயந்திரங்கள் இதுவரை 40 அடி தோண்டப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட  ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் பல தனி நபர்கள்  என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக  ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் பாறைகள் இருப்பதால் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

surjith

இந்நிலையில் நேற்று காலை 7மணி முதல் தொடர்ந்து  இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் மற்றும் மழை குறுக்கிடுவதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரை 40 அடி தோண்டப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  முதல் ரிக் இயந்திரம் 35 அடியும், இரண்டாவதாக வந்த ரிக் இயந்திரம் இதுவரை 5 அடி தோண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.