குழந்தையை கொன்றார் -கள்ளக்காதலனுடன் சென்றார் -கணவன் தெருவில் நின்றார் .. கள்ளகாதலால்  கண்ணீரில்  குடும்பம் 

 

குழந்தையை கொன்றார் -கள்ளக்காதலனுடன் சென்றார் -கணவன் தெருவில் நின்றார் .. கள்ளகாதலால்  கண்ணீரில்  குடும்பம் 

சண்டிகரில் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு ஒரு பெண் காதலனுடன் ஓடிப்போனார் .
இந்த சம்பவம் குறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில் மின்சார வல்லுநரான அப்பெண்ணின் கணவர் வீட்டில் பெட்டியைத் திறந்தபோது தனது 2.5 வயது மகனை பிணமாக கண்டுபிடித்தார். 

சண்டிகரில் பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு ஒரு பெண் காதலனுடன் ஓடிப்போனார் .
இந்த சம்பவம் குறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில் மின்சார வல்லுநரான அப்பெண்ணின் கணவர் வீட்டில் பெட்டியைத் திறந்தபோது தனது 2.5 வயது மகனை பிணமாக கண்டுபிடித்தார். 
இறந்த குழந்தையின் தந்தை ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவரது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என தேடியபோது இந்த  சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.தனது மனைவி குழந்தையை கொலை செய்துவிட்டு, காதலனுடன் ஓடிப்போனதாக அவர் மனைவி மீது குற்றம் சாட்டி,போலீசில் புகார் அளித்தார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த கணவர் ஆரம்பத்தில் தன் மனைவி மற்றும் குழந்தை  தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது மனைவி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் குழந்தையின் தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.