குழந்தையின் கையை கொதிக்கும் நீரில் வைத்து அழுத்திய கொடூர வேலைக்கார பெண்… அதிர வைக்கும் வீடியோ!

 

குழந்தையின் கையை கொதிக்கும் நீரில் வைத்து அழுத்திய கொடூர வேலைக்கார பெண்… அதிர வைக்கும் வீடியோ!

இதனால் கணவன் – மனைவி இருவரும் அப்பெண்ணின் பாதுகாப்பில் குழந்தையை நம்பிவிட்டுவிட்டு வேலைக்கு  சென்று வந்துள்ளனர். 

சிங்கப்பூரில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு  செல்வதால் தங்களின்  குழந்தையை பார்த்துக்கொள்ள பணிப்பெண் ஒருவரை தேடிவந்துள்ளனர்.

ttn

அப்போது தான் மியன்மாரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர்  வேலைக்கு  கிடைத்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவரும் அப்பெண்ணின் பாதுகாப்பில் குழந்தையை நம்பிவிட்டுவிட்டு வேலைக்கு  சென்று வந்துள்ளனர். 

ttn

இந்நிலையில் திடீரென்று குழந்தையின் கையில் தீக்காயம் ஏற்பட்டு  விட்டதாக அப்பெண் குழந்தையின் பெற்றோருக்கு சொல்ல விரைந்துவந்த அவர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தையின் காயத்தைக் கண்ட மருத்துவர்கள் இது எதேச்சையாக நடந்தது போல இல்லை என்று கூறியுள்ளனர்.

ttn

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.  அதற்கு காரணம்,  குழந்தையை வைத்து கொண்டிருந்த  அந்த பணிப்பெண், குழந்தையின் கையை அடுப்பில் கொதிக்கும் தண்ணீரில் வைத்து அழுத்தியுள்ளது தான்.  

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க, அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.