குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

 

குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை: குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த், சென்னை திருவான்மியூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற  குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். பூமியில் நடமாடும் பூக்கள் குழந்தைகள் என்றார். மேலும், குழந்தைகளுக்கான சேவைகள் செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுகளையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், குழந்தைகள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என குற்றம் சாட்டினார். அத்துடன், குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாத அரசு, நாடு எப்படி நன்றாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதற்கு பின்னால் மாஃபியா கும்பல் உள்ளது என குறிப்பிட்ட ரஜினிகாந்த், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை குற்றத்திற்கு சமம். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை கொலை குற்றத்திற்கு நிகராக தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.