குழந்தைகளை கொல்லத்தூண்டிய மூடநம்பிக்கை ! போதையில் தாயின் வெறிச்செயல் !

 

குழந்தைகளை கொல்லத்தூண்டிய மூடநம்பிக்கை ! போதையில் தாயின் வெறிச்செயல் !

அமெரிக்காவில் கஞ்சா போதையில் இருந்த தாய் மூடநம்பிக்கையில் குழந்தைகளை கொல்ல முயன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் கஞ்சா போதையில் இருந்த தாய் மூடநம்பிக்கையில் குழந்தைகளை கொல்ல முயன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

புளோரிடா மாகாணத்தில், கால்சியா வில்லியம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவர் கஞ்சாவை அதிகமாக உட்கொண்டு காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. காரில் 7 வயது முதல் 13 வயது வரையிலான 4 குழந்தைகளை அழைத்துச் சென்றார். அப்போது காரில் இருந்த குழந்தைகளை பார்த்து சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு கண்ணாடியை திறந்துவிட்டு வெளியே கைகளை நீட்டுமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன குழந்தைகள் முடியாது என கூறியுள்ளனர். ஆனால் பேய்கள் நல்லவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் நம்மை காப்பாற்றுவார் என மூடநம்பிக்கையாக பேசி உள்ளார். பின்னர்  போதை தலைக்கேறவே தன்னுடைய காரை வேகமாக ஓட்டி சென்று பனை மரம் ஒன்றில் மோதியுள்ளார். இதில் 4 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

acci

இதுகுறித்து கால்சியா வில்லியம்ஸிடம் போலீசார் விசாரித்தபோது காரை ஓட்டும்போது கஞ்சா உட்கொண்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் கணவர்தான் சாத்தானை தன்மீது ஏவிவிட்டு இப்படி பேச வைத்ததாக தெரிவித்துள்ளார். இதை நம்பாத காவல்துறை பெற்ற குழந்தைகளைக் கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காயமடைந்த 4 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகத்திலேயே பாதுகாப்பான இடம் என்பது தாயின் மடிதான். ஆனால் அங்கேயே இதுபோன்ற முட்டாள்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.