குழந்தைகளின் உளவியல் ரீதியான தற்கொலைக்கு தீர்வு காணும் முயற்ச்சியில் நடிகர் விஷால்

 

குழந்தைகளின் உளவியல் ரீதியான தற்கொலைக்கு தீர்வு காணும் முயற்ச்சியில் நடிகர் விஷால்

குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

சென்னை: குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

vishal

இதுதொடர்பாக நடிகர் விஷால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் ‘இந்தியாவில் 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. 

vishal

மேலும் அவற்றை தடுக்க சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சனைகளைப் பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காக  ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.

vishal

ஆகையால் நீங்கள் துன்பத்திலிருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்’ என்று அதில் கூறியுள்ளார்.

vishal