குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டினால்… இனி இதுவும் நடக்கும்..!

 

குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டினால்… இனி இதுவும் நடக்கும்..!

அப்பகுதி சின்ன குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். அவர் மீது வேற எந்த வழக்கும் இல்லை. ஆனால் குண்டர் சட்டம் போட்டு இருக்கிறார்கள்.

சிறையில் உள்ள ‘போக்சோ’ கைதிகள் பீதியில் இருக்கிறார்கள். மதுரையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருக்கிறார்கள். ரவுடிகளைத் தான் இந்த சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.  ஆனால், இப்போது ‘போக்சோ’ சட்டத்தில் கைதானவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பலசரக்கு கடை நடத்தி வந்த ஒருத்தர், அப்பகுதி சின்ன குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். அவர் மீது வேற எந்த வழக்கும் இல்லை. ஆனால் குண்டர் சட்டம் போட்டு இருக்கிறார்கள்.child

இதனால், சிறையில் உள்ள மற்றவர்களும் தங்கள் மீதும், ‘போக்சோ’ பாய்ந்து விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள். கள்ளத் துப்பாக்கியா? பொம்மை துாப்பாக்கியா எனத் தெரியாமல் புலம்புகிறார்கள். சென்னை பட்டாபிராம் பகுதியில் சமீபத்தில் நடந்த வழிப்பறி முயற்சியில், திருச்சியைச் சேர்ந்த சுரேஷை  பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார்கள். 

அவனிடம்  இருந்து, கைத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அது, பொம்மை துப்பாக்கி என, அம்பத்துார் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். அதே நேரம் அது, கள்ளத் துப்பாக்கி என பேச்சு கிளம்பியது. அந்த துப்பாக்கியோட போட்டோவை அனுப்பி வையுங்கள் என துணை கமிஷனர் உத்தரவு போட்டு இருக்கிறார். ஆனால், இப்போது வரைக்கும் அது என்ன துப்பாக்கி எனத் தெரியவில்லை.