குளிக்க சென்ற ஆற்றில் சிக்கி உயிரிழந்த அக்கா-தம்பி: அதிர்ச்சி அடைந்த தாய் தற்கொலை முயற்சி!!!

 

குளிக்க சென்ற ஆற்றில் சிக்கி உயிரிழந்த அக்கா-தம்பி: அதிர்ச்சி அடைந்த தாய் தற்கொலை முயற்சி!!!

திருவாரூர் மாவட்டம் அருகே ஸ்ரீராம், திவ்யா என அக்கா தம்பி இருவரும் தனது தாயாருடன் வசித்து வருகின்றனர். அவர்களது தந்தை வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இன்று மாலை இருவரும், குளிக்கலாம் சென்று வீட்டின் அருகே உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். 

River

எதிர்பாராத விதமாக இருவருமே ஆற்றில் சிக்கிக் கொண்டு வெகுநேரம் தண்ணீரில் இருந்து மீண்டு வர போராடியுள்ளனர். ஆனால் இருவரின் முயற்சியும் கை கொடுக்க வில்லை. அதனைக் கண்ட ஊர் மக்கள் போராடி அவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு விரைந்தனர். மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த, இவர்களது தயார் கவிதா பிள்ளைகளின் இறப்பை ஏற்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரை ஊர் மக்கள் காப்பாற்றி விட்டனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்களும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்கவும், இனிமேலும் உயிர்கள் பறிபோகாமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.