குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

 

குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், அவர் தனது  மாநிலத்திற்கே திரும்ப செல்ல உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. 

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், அவர் தனது  மாநிலத்திற்கே திரும்ப செல்ல உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தவிர்க்கப் பட்டதையடுத்து அதனை பற்றி தனது காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க ஸ்ரீநகர் சென்றார் குலாம் நபி ஆசாத். விமானத்திலிருந்து இறங்கியதுமே அவர் தடுத்து நிறுத்தப் பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Ghulam nabi azad

இந்நிலையில் குலாம் நபி ஆசாத் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி வழங்க படாததையடுத்து அவர் வழக்கு பதிவு செய்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப செல்லலாம் என்று உத்தரவளித்தார். 

Supreme court judge

மேலும், அவர் ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, ஆனந்தநாக் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லலாம் என்றும் கூறினார். ஆனால் குலாம் நபி ஆசாத் எந்த விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.