குற்றவாளி இல்லை என நிரூபிக்க வீடியோ வேண்டும் ! நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் கோரிக்கை நிராகரிப்பு

 

குற்றவாளி இல்லை என நிரூபிக்க வீடியோ வேண்டும் ! நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் கோரிக்கை நிராகரிப்பு

2017ல் மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த வழக்கில் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ, ஃபோனையும் திரும்பத் தரவேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது

2017ல் மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த வழக்கில் கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ, ஃபோனையும் திரும்பத் தரவேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது

dileep

2017ஆம் ஆண்டு மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரையும் காவல்துறை கைது செய்தது. பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.இதை நீதிமன்றம் நிராகரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்றமும் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.  

high court

வீடியோ ஆதாரங்களை குற்றம்சாட்டப்பட்ட திலீப்பும், அவரது வழக்கறிஞரும் ஆய்வு செய்யலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை, கடத்தல் தொடர்பான காணொலிகளை வழங்கினால் அதை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.