குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட தம்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
தம்போ நிறுவனம் இந்தியாவில் TA-40 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி: தம்போ நிறுவனம் இந்தியாவில் TA-40 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
தம்போ நிறுவனம் தனது புது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, குவாட்-கோர் சிப்செட், 1 ஜி.பி.ரேம், 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் விரல்ரேகை சென்சார் கொண்டிருக்கும் தம்போ TA-40 ஸ்மார்ட்போனில் 2400 எம்.ஏ.ஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
தம்போ TA-40 சிறப்பம்சங்கள்:
– 5.45 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
தம்போ TA-40 ஸ்மார்ட்போன் புளு மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.