‘குறும்பட இயக்குநர்’ அருண்மொழி மாரடைப்பால் மரணம்: மிஷ்கின் கண்ணீர்!
தமிழ் சினிமா கலைஞர்களுக்கு மிகவும் பரிட்சயமான இவர் ‘காணிநிலம்’, நாசர் ஹீரோவாக நடித்த ‘ஏர்முனை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்பட மற்றும் குறும்பட இயக்குநர் அருண் மொழி மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 49.
இயக்குநர் ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அருண்மொழி. தமிழ் சினிமா கலைஞர்களுக்கு மிகவும் பரிட்சயமான இவர் ‘காணிநிலம்’, நாசர் ஹீரோவாக நடித்த ‘ஏர்முனை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
நிலமோசடி, மூன்றாவது இனம், இசைவானில் இன்னொன்று போன்ற தனித்துவமான குறும்படங்கள் எடுத்துள்ள இவரின் படைப்புகள் பெரிதும் பலரும் சொல்ல தயங்கியவையாகவே இருக்கும். எப்போதும் படைப்புகளை சார்ந்தே வாழ்ந்து வந்த இவர் பல மாணவர்களுக்கு இதுகுறித்து படமாகவும் எடுத்து வந்தார்.
இந்நிலையில் ஜப்பானிய திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானிய மொழி திரைப்படத்தைப் பார்த்து முடித்த போது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
#DirMysskin‘s condolence message abt the loss of Guiding light Mr #Arunmozhihttps://t.co/I49d6Ptgpi#RIPArunMozhi#Mysskin @Winsun_PRO
— Rajkumar Pro (@rajkumar_pro) November 10, 2019
இவரது மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.