குரூப் 2 தேர்வு முறைகேடு.. காவலர் சித்தாண்டி தலைமறைவு : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

 

குரூப் 2 தேர்வு முறைகேடு.. காவலர் சித்தாண்டி தலைமறைவு : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, முறைகேட்டில் சிக்கிய அனைத்து நபர்களும் வாழ்நாள் முழுவதும் இந்த தேர்வுகளை எழுத முடியாத படி  டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்விலும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. 

ttn

அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரது வீட்டில் தேர்வு எழுதிய 4 பேர் மாநில அளவில் ரேங்க் எடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது. அவர் முறைகேட்டில் ஈடுபட்டுத் தான் தேர்ச்சி பெற வைத்தார் என்று எழுந்த புகார் பற்றி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி வீட்டிற்குச் சென்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. அதனால் சித்தாண்டியின் சகோதரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் மூலம், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. முறைகேட்டில் ஈடுபட்ட சித்தாண்டி தலைமறைவாக உள்ளதால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்நிலையில், காவலர் சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.