குரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்ட ஹெச். ராஜா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பதிவு!

 

குரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்ட ஹெச். ராஜா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பதிவு!

குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும்

குரங்குடன் ஸ்டாலினை ஒப்பிட்ட ஹெச். ராஜா: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பதிவு!

சென்னை : ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக போராட்டம் நடத்தியது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். 

மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது.  மேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் என அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிகளும்  டெல்லி, ஜந்தர் மந்தரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தப்போவதாக அறிவித்தது. அதன்படி இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி.ராஜா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் திமுக நடத்திய இந்த போராட்டம் குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘குரங்குக்கு முன்னாடி கஞ்சி கலையத்தை வைத்தால் அது கை வைக்காது. குட்டியோட வால விட்டு பார்க்கும். குட்டி கத்தினா கஞ்சி சூடா இருக்கு என்று குரங்கு கை வைக்காது. இல்லேனா குரங்கு கஞ்சிய குடிக்க துவங்கும். இதுக்கும் டில்லி ஜந்தர் மந்தரில் ஸ்டாலின் அறிவிச்ச போராட்டத்திற்கும் தொடர்பில்லை’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சிலர் ஆதரவாகவும் சிலரோ வசைபாடியும் ட்வீட் செய்து வருகின்றனர்.