குப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறை !

 

குப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறை !

ஜோலார் பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

ஜோலார் பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனே அங்குச் சென்ற பொதுமக்கள், அங்கே 8 மாத பெண் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குழந்தை குறித்து, ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்குப் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். 

ttn

உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய காவல் துறையினர், அந்த குழந்தையின் பெற்றோர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காப்பகத்தில் குழந்தைக்குத் தேவையான அனைத்து பரிசோதனையும் செய்யப்பட்டது. குழந்தை பற்றி விளம்பரம் கொடுத்துள்ளோம். 2 முதல் 3 மாதம் வரை அந்த குழந்தையைத் தேடி யாரும் வரவில்லை என்றால் அந்த குழந்தை காப்பகத்திலேயே பாதுகாப்பாக வளர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.