குடும்ப சண்டையில் குழந்தை கொலை -மகளை தந்தையே கொன்ற கொடுமை -ஐந்து நாள் கழித்து தாத்தாவால் அம்பலம் …
ஜோத்பூரில் கணவன் மனைவி குடும்ப சண்டையில் தன் ஒன்னரை வயது குழந்தையை அவளது தந்தையே கொலை செய்த சம்பவம் ஐந்து நாள் கழித்து அவரது தாத்தாவால் வெளிச்சத்துக்கு வந்தது .
இது பற்றி போலீசார் கூறுகையில் ,சோஜர் சிட்டிக்கு அருகே சந்தாவால் கிராமத்தில் டிசம்பர் 19ன் தேதி ஓம்பிரகாஷ்க்கும் அவரது மனைவிக்குமிடையே தகராறு நடந்துள்ளது .
ஜோத்பூரில் கணவன் மனைவி குடும்ப சண்டையில் தன் ஒன்னரை வயது குழந்தையை அவளது தந்தையே கொலை செய்த சம்பவம் ஐந்து நாள் கழித்து அவரது தாத்தாவால் வெளிச்சத்துக்கு வந்தது .
இது பற்றி போலீசார் கூறுகையில் ,சோஜர் சிட்டிக்கு அருகே சந்தாவால் கிராமத்தில் டிசம்பர் 19ன் தேதி ஓம்பிரகாஷ்க்கும் அவரது மனைவிக்குமிடையே தகராறு நடந்துள்ளது
.அந்த தகராறில் மனைவியை ஓம்பிரகாஷ் அடித்து காயப்படுத்தியதில் உறவினர்கள் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்குஅழைத்து சென்ற சமயம், வீட்டிலிருந்த தன் ஒன்னரை வயது பெண் குழந்தையை கோபத்தில் அடித்து கொன்றுவிட்டார் பிறகு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் .
அனைவரும் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து வீட்டில் பார்த்த போது பெண் குழந்தை ரத்த வெள்ளத்தில் கொலை செய்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுற்றனர் .பிறகு யாருக்கும் தெரியாமல் தாத்தாவின் ஆலோசனைப்படி அமைதியாக குழந்தையை புதைத்து விட்டனர் .
அக்கொலை நடந்து ஐந்து நாட்களுக்கு பிறகு தாத்தா போலீஸ்நிலையத்துக்கு வந்து தனது மகன் ஓம்பிரகாஷ் தான் குழந்தையை கொன்றுவிட்டான் என புகார் கொடுத்ததன் பேரில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர் .