குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மகள்களை ஆற்றில் வீசிய தந்தை !

 

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மகள்களை ஆற்றில் வீசிய தந்தை !

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மகள்களை அவர்களது தந்தையே ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு மகள்களை அவர்களது தந்தையே ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் பத்தடி பாலத்தை சேர்ந்தவர் பாண்டி.  45 வயது கூலித் தொழிலாளி இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி ரேணுகா தேவி குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்

river

இந்நிலையில் குடிபோதையில் ஆத்திரமடைந்த பாண்டி, லாவண்யா மற்றும் ஸ்ரீமதி என்ற இரு குழந்தைகளையும் அப்பகுதியிலிருந்த அரசலாற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இதில் லாவண்யாவை அப்பகுதி மக்கள் மீட்டனர். ஸ்ரீமதி என்ற குழந்தையின் உடலை பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பாண்டியை கும்பகோணம் மேற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.