குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய நடிகை ஐஸ்வர்யா ராய் : வைரல் போட்டோஸ்!

 

குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய  நடிகை ஐஸ்வர்யா ராய் : வைரல்  போட்டோஸ்!

அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார்.

மிஸ் வேர்ல்டு என்று சொன்னால் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு உடனடியாக நினைவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

 

தனது நடிப்பு திறமையினாலும், அழகாலும் பாலிவுட்டை இன்னும் கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பேரழகி  ஐஸ்வர்யா ராய்   பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார்.

 

இந்தத் தம்பதிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

✨?Happy Holi to All?Love n Light✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  ”அனைவருக்கும் ஹேப்பி ஹோலி. அன்பும் பிரகாசமும் நிலைக்கட்டும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்ப்பதாக அறிவித்தது. இருப்பினும் பெரும்பாலான வாடா இந்தியர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.