குடியரசு தலைவர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி! 

 

குடியரசு தலைவர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி! 

துணை குடியரசு தலைவர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துணை குடியரசு தலைவர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் பெற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த தியாகராஜன், சேஷைய்யா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்  ஆளுநரின் நேர்முக உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

கைது

இதேபோல் காவல்துறை, மின்வாரியம், துறைமுகத்தில் என்ஜினியர் என பல துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய டேனியல் ராஜ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.