‘குடிப்பதை நிறுத்திவிட்டேன்…பணத்துக்காக ஓடுவதில்லை’ : நடிகை சோனாவின் திடீர் பதிவு!

 

‘குடிப்பதை நிறுத்திவிட்டேன்…பணத்துக்காக ஓடுவதில்லை’ : நடிகை சோனாவின் திடீர் பதிவு!

செயற்கை வைர நகை வியாபாரத்தில் இறங்கி இன்னும் அதளபாதாளத்திற்கு சென்றார். 

நடிகை சோனா  பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், இதன்பிறகு ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ  ஆகிய படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றிவந்த சோனாவுக்கு  சமீபகாலமாகப் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதையடுத்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி படத்தை தயாரித்த அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து  செயற்கை வைர நகை வியாபாரத்தில் இறங்கி இன்னும் அதளபாதாளத்திற்கு சென்றார். 

ttn

தற்போது  மலையாளத்தில்  குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பச்ச மாங்கா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் கட்டாகி வரும் அவர், திரிஷா நடித்துள்ள பரமபத விளையாட்டு,  வரலட்சுமியின்  சேசிங் படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சோனா தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்டகிறார்கள். நான் இந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளேன். 12 படங்களை  வேண்டாம் என நிராகரித்துள்ளேன். நிம்மதியை தேடி பயணிக்கிறேன். முன்பை போல் இல்லாமல்  முதிர்ச்சியான மனநிலை ஏற்பட்டுள்ளது. பணத்திற்காக ஓட வேண்டிய அவசியம் இல்லை.  குடிப்பதை கூட நிறுத்திவிட்டேன். 2020 ஆண்டு எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையும்  என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.