குடிபோதையில் ஹீரோயிஸம் காட்டிய இளைஞர் : பதிலுக்கு தன் பலத்தை காட்டிய யானை?!

 

குடிபோதையில் ஹீரோயிஸம் காட்டிய இளைஞர் : பதிலுக்கு தன் பலத்தை காட்டிய யானை?!

இந்நிலையில் குடிபோதையிலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜூ என்ற இளைஞர்  யானைக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால் மக்கள் கூட்டமும் யானைகளை நெருங்கி செல்ல

மலூர்:  குடிபோதையில் யானைக்கு முத்தமிட முயன்ற இளைஞரை யானை தாக்கியதால் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தமிழ்நாடு – கர்நாடக எல்லையிலுள்ள தோத்தி கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை உண்டு வருகிறது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் யானையை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். 

yanai

இந்நிலையில் குடிபோதையிலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜூ என்ற இளைஞர்  யானைக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால் மக்கள் கூட்டமும் யானைகளை நெருங்கி செல்ல, கூட்டத்தை கண்ட யானைகள் மிரண்டு அவர்களை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். ஆனால் அந்த நபர் மட்டும் முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால் யானை ராஜூவை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த அந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

elephant

கன்னடப் படம் ஒன்றில் யானைக்கு ஹீரோ முத்தமிடுவது போன்ற காட்சியை வைத்தே யானைக்கு ராஜு முத்தமிடச் சென்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.