குடிபோதையில் இருந்த நபர்.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

 

குடிபோதையில் இருந்த நபர்.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!

பக்கத்து வீட்டுக் காரரை குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கில் பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே டாஸ்மாக்குகள் வேறு திறக்கப்பட்டு விட்டன. இதனால் குடிமகன்கள் செய்யும் குற்றங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் குடிபோதையில் இருந்த நபர் பக்கத்து வீட்டுக் காரரை குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழதேனூர் கிராமத்தில் வசித்து வந்த சிவானந்தம் (45) என்பவரின் மகனை பக்கத்து வீட்டுக்காரரான ராஜி குடிபோதையில் தாக்கியுள்ளார். இதனால் சிவானந்தத்திற்கும் ராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ராஜி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சிவானந்தத்தை குத்தி படுகொலை செய்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராஜியை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா, ராஜேஷ் என்ற இருவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.