குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: காவல்துறை அறிவிப்பு

 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை: புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புத்தாண்டு தினத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதுடன் குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கிண்டி. அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம் , எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனங்களில் ரோந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேனி, தி.நகர், அடையாறு உள்ளிட்ட 368 இடங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு 9 மணி முதல் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், வழிபாட்டுத்தலங்களில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் போலீஸ் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.