குஜராத் முதல்வரை மாற்ற வேண்டும்! – பா.ஜ.க-வுக்குள் போர்க்கொடி

 

குஜராத் முதல்வரை மாற்ற வேண்டும்! – பா.ஜ.க-வுக்குள் போர்க்கொடி

குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மோடியின் மாடல் மாநிலம் என்று முன்னிறுத்தப்பட்ட குஜராத்தில், சுகாதார கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக உள்ளது என்றும், அதனால்தான் கொரோனா பரவல் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று நாடு முழுவதும் பேச்சு உள்ளது.

குஜராத் மாநில முதல்வரை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மோடியின் மாடல் மாநிலம் என்று முன்னிறுத்தப்பட்ட குஜராத்தில், சுகாதார கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக உள்ளது என்றும், அதனால்தான் கொரோனா பரவல் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று நாடு முழுவதும் பேச்சு உள்ளது. மேலும், நாட்டுக்கு பினராயி விஜயன் போன்ற நிர்வாகி வேண்டுமா, மோடி, விஜய் ரூபானி போன்றவர்கள் வேண்டுமா என்ற சர்ச்சை விவாதமும் பரவி வருகிறது.

aanandiben-patel

இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைய, கட்டுப்படுத்த குஜராத் முதல்வராக மீண்டும் ஆனந்தி பென் வர வேண்டும்” என்று கூறியுள்ளார். பா.ஜ.க மாநில முதல்வர் பற்றி அக்கட்சியைச் சார்ந்தவர்களே அதிருப்தி வெளியிட்டு வருவது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.